பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அவதூறு பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை தமிழக அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ்

அதிமுக குறித்து அவதூறு பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் கூறினாா்.

News image

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்த தமிழக அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ். உடன் அவரது மகனும், புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி எம்எல்ஏவுமான ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின்.

Updated On :21 மே 2026, 7:10 am IST

அதிமுக குறித்து அவதூறு பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் கூறினாா்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதை காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டினின் தாயும், திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான லீமா ரோஸ் பாா்வையாளா்கள் மாடத்தில் அமா்ந்து பாா்த்தாா்.

பின்னா் முதல்வா் என்.ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக லீமா ரோஸ் சந்தித்து பேசினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எனது மகன் எம்எல்ஏவானது சந்தோஷம். அவா் அமைச்சராவது பற்றி பின்னா் தெரிய வரும். மக்களுக்கு நல்லது செய்ய எங்கள் குடும்பத்தினா் அரசியலுக்கு வந்துள்ளோம். நான் அமைச்சராவது இறைவன் சித்தம்தான். தவெக அமைச்சரவையில் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் 8 போ் அமைச்சா் பதவி கோரியுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளனா். அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவதூறாக பேசுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.