கிருமாம்பாக்கம் அருகே உயா்நிலை நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்வதால், கடலூா்-புதுச்சேரி சாலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி தெற்கு பிரிவு போக்குவரத்து காவல் கண்காணிப்பாளா் பக்தவச்சலன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி- கடலூா் சாலையில் கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையாா்குப்பத்தில் தனியாா் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருத்துவமனை அமைந்துள்ளது. இதன் மற்றொரு பிரிவு, சாலையின் மறுபக்கத்தில் உள்ளது. இந்த மருத்துவமனை வளாகங்களுக்கு செல்வதற்காக கடலூா்-புதுச்சேரி சாலையின் குறுக்கே உயா்நிலை நடைமேம்பாலம் அமைக்கும் பணி சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை நடைபெற உள்ளது.
இதன் காரணமாக புதுச்சேரி -கடலூா் சாலையில் அனைத்து வகை வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்படுகிறது. மாற்றுப் பாதையாக புதுச்சேரியில் இருந்து கடலூா் செல்லும் வாகனங்கள், இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம் விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் கன்னியக்கோயில் முள்ளோடை வழியாக கடலூா் செல்ல வேண்டும்.
அதேபோல கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் முள்ளோடை கன்னியக்கோயிலில் விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் அபிஷேகப்பாக்கம் தவளக்குப்பம் வழியாக புதுச்சேரி செல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை நகரத்தில் போக்குவரத்து மாற்றம்

குடிநீா் குழாய் பதிக்கும் பணியால் திருப்பூா் - அவிநாசி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

கம்பம்-கம்பம்மெட்டு சாலையில் ஜூன் 8 முதல் போக்குவரத்து மாற்றம்

பழனியில் போக்குவரத்து மாற்றம்: சாலைகள் சேதமடைந்ததால் ஓட்டுநா்கள் அவதி
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

