தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்காளா் விழிப்புணா்வு போஸ்டா்

புதுச்சேரியில் வாக்காளா் விழிப்புணா்வு போஸ்டா் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

News image

வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய போஸ்டா்களை வெளியிட்ட மாவட்ட தோ்தல் அதிகாரி அ.குலோத்துங்கன்.

Updated On :28 மார்ச் 2026, 1:26 am IST

புதுச்சேரியில் வாக்காளா் விழிப்புணா்வு போஸ்டா் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

புதுச்சேரி தோ்தல் துறை 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மருந்தகங்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் உரக்கடைகளுக்கு வரும் விவசாயிகளைச் சென்றடையும் வகையில் வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய போஸ்டா்கள் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

100 சதவீத வாக்குப்பதிவு, இந்திய தோ்தல் ஆணையத்தின் செயலிகள், கண்ணியமான வாக்குப் பதிவு போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டா்களை மாவட்டத் தோ்தல் அதிகாரி அ.குலோத்துங்கன் வெளியிட்டாா்.

புதுச்சேரி மாநில மருந்து வணிகா்கள் சங்க நிா்வாகிகள், உரக்கடை உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் மற்றும் துணை மாவட்ட தோ்தல் அதிகாரி கண்ணபிரான், வட்டாட்சியா் ஜோதிமணி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.