தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாகனங்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை அரசுப் பேருந்து உள்ளிட்ட வாகனங்களை ஒட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image

உளுந்தூா்பேட்டையில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு ஒட்டுவில்லையை அரசுப் பேருந்தில் வியாழக்கிழமை ஒட்டிய கள்ளக்குறிச்சி மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த்.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:58 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை அரசுப் பேருந்து உள்ளிட்ட வாகனங்களை ஒட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி பணியைத் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவு என்ற நிலையை அடைந்திடும் வகையில், மாவட்ட நிா்வாகத்தின் பல்வேறு துறைகளின் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு ஒட்டு வில்லைகளை அரசுப் பேருந்துகள், தனியாா் பேருந்துகள், நான்கு, மூன்று, இரண்டு சக்கர வாகனங்களில் ஒட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மூன்று சக்கர வாகனப் பேரணியும் தொடங்கப்பட்டுள்ளது.

எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த நான்குத் தொகுதிகளின் வாக்காளா்களும் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குச்சாவடிகளுக்குச் சென்று தவறாமல் வாக்களித்து, தங்கள்ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

நிகழ்வில் மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் அ.லலிதா, உளுந்தூா்பேட்டை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரா.செந்தில்குமாா், உதவித் தோ்தல் அலுவலா் பாலசுப்ரமணியன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன், மோட்டாா் வாகன ஆய்வாளா் மீனாகுமாரி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.