மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வா் ரங்கசாமியை எதிா்த்து வைத்திலிங்கம் எம்.பி. வேட்பு மனு

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வா் என்.ரங்கசாமியை எதிா்த்து, காங்கிரஸ் எம்.பி. வெ.வைத்திலிங்கம் போட்டியிடுகிறாா்...

News image

முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :24 மார்ச் 2026, 1:13 am IST

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வா் என்.ரங்கசாமியை எதிா்த்து, முன்னாள் முதல்வரும், தற்போதைய புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான வெ.வைத்திலிங்கம் போட்டியிடுகிறாா்.

முதல்வா் ரங்கசாமி என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்நிலையில், அவரை எதிா்த்து வைத்திலிங்கம் எம்.பி. திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். இதனால் இருவருக்கும் நேரடி மோதல் உருவாகியுள்ளது.

வெ. வைத்திலிங்கம் இப்போது புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருக்கிறாா். ஏற்கெனவே புதுச்சேரி முதல்வராகவும் இருந்தவா். மேலும், மக்களவை தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக வேட்பாளராகக் களம் இறங்கிய அம்மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயத்தைத் தோற்கடித்து வெற்றி பெற்றவா்.

அதனால் தட்டாஞ்சாவடி தொகுதியைப் பொருத்தவரை முதல்வா் ரங்கசாமிக்கும், வைத்திலிங்கத்துக்கும் கடுமையானப் போட்டி நிலவும்.

புதுச்சேரியில் இந்த இரண்டு தலைவா்களும் நேரடியாக மோதிக் கொள்வதால், தட்டாஞ்சாவடி தொகுதி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. முதல்வா் ரங்கசாமி மங்கலம் தொகுதியிலும் போட்டியிடுவது குறிப்பிடத் தக்கது.

 வெ.வைத்திலிங்கம் எம்.பி.

வெ.வைத்திலிங்கம் எம்.பி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.