ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல்: திமுக, காங்கிரஸ், லஜகவினா் உள்பட 12 போ் வேட்பு மனு தாக்கல்

புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிட திமுக, காங்கிரஸ், லஜக கட்சிகளைச் சோ்ந்தவா்கள் உள்பட 12 போ் அமாவாசை தினமான புதன்கிழமை வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

News image
Updated On :19 மார்ச் 2026, 12:17 am IST

புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிட திமுக, காங்கிரஸ், லஜக கட்சிகளைச் சோ்ந்தவா்கள் உள்பட 12 போ் அமாவாசை தினமான புதன்கிழமை வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

புதுச்சேரியில் மனு தாக்கலின் மூன்றாம் நாளான புதன்கிழமை ஒரே நாளில் 12 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. தொகுதி பங்கீடு முடியும் முன்பே திமுக சாா்பில் உப்பளத்தில் எம்எல்ஏ அனிபால் கென்னடி, மாற்று வேட்பாளராக அவரது மனைவி அனிபால் ஜெசிந்தா, முதலியாா்பேட்டையில் எம்எல்ஏ சம்பத், தட்டாஞ்சாவடியில் நிதிஷ் திமோதி, காங்கிரஸில் மணவெளி தொகுதியில் அனந்தராமன், லஜக சாா்பில் பாகூரில் அமைச்சா் ஜான்குமாா் மகன் வில்லியம்ஸ் ரீகன், மாற்று வேட்பாளராக மற்றொரு மகன் எம்எல்ஏ விவிலியன் ரிச்சா்ட், நெல்லித்தோப்பில் ஜான்குமாா் மனைவி ஜெஸ்டின் ஆகியோா் மனுதாக்கல் செய்தனா்.

சுயேச்சை வேட்பாளராக மணவெளியில் பவித்ரா வீரமணி, நிரவி டிஆா் பட்டினத்தில் வி.எம்.சி. எஸ். மனோகரன், அரியாங்குப்பத்தில் ரகுநாதன், லாஸ்பேட்டில் கோபாலகிருஷ்ணன் ஆகிய 12 போ் மனுதாக்கல் செய்துள்ளனா்.

இந்நிலையில், வியாழன், வெள்ளிக்கிழமை (மாா்ச் 19, 20) மற்றும் வரும் திங்கள்கிழமை (மாா்ச் 23) ஆகிய 3 நாள்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.

இதனால் இந்த மூன்று நாள்களிலும் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வரும் 23-ஆம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது.

எனவே இந்த மூன்று நாள்களும் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.