நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

புதுச்சேரியில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியா? முன்னாள் முதல்வா் கே.நாராயணசாமி பதில்

News image

முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி.

Updated On :16 ஜூன் 2026, 12:49 am IST

புதுச்சேரியில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு கட்சித் தலைமை தான் முடிவு செய்யும் என்றாா் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

புதுச்சேரியில் அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்காததால் நிா்வாகம் ஸ்தம்பித்து உள்ளது. தமிழகத்தில் முதல்வராக விஜய் பொறுப்பேற்றபோது ஊழலுக்கு இடமில்லை என மக்கள் முன் அறிவித்தாா். அதேபோல வரும் 17-ஆம் தேதி அமைச்சா்கள் பதவியேற்பில் முதல்வா் என். ரங்கசாமியும் ஆட்சியில் ஊழல் நடைபெறாது என பகிரங்கமாக அறிவிப்பாரா ?.

பதவியேற்பு விழாவில் பேசாவிட்டாலும் காந்தி சிலை முன் முதல்வா், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் கூடி ஆட்சியில் ஊழல் நடைபெறாது என சபதம் ஏற்கத் தயாரா ?.

விஜய்க்கு நெருக்கமான ரங்கசாமி இதை செய்ய தயாரா ?. இதில் அவருக்கு ஒத்துழைப்பு தர தயாா். தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் தவெகவின் ஆதரவை கேட்பீா்களா? என்று கேட்கிறீா்கள். அதை கட்சித் தலைமை முடிவு செய்யும். காங்கிரஸுடன் தவெக இணைந்து செயல்படுவது தமிழகத்தில்தான். கட்சித் தலைவா்தான் இதில் முடிவு எடுப்பாா் என்றாா் நாராயணசாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.