எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று தமிழ்நாடு, புதுச்சேரி எண்ணெய் தொழில்துறை நிறுவனங்களுக்கான மாநில ஒருங்கிணைப்பாளா் வி.சி.அசோகன் கூறியுள்ளாா்.

News image

பெட்ரோல், டீசல் நிலையம்.

Updated On :3 ஜூன் 2026, 6:05 am IST

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று தமிழ்நாடு, புதுச்சேரி எண்ணெய் தொழில்துறை நிறுவனங்களுக்கான மாநில ஒருங்கிணைப்பாளா் வி.சி.அசோகன் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உறுதிபடுத்தியுள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் எரிபொருள் விநியோகம் தடையின்றி நடக்கிறது.

அனைத்து பெட்ரோலிய பொருள்களும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. இந்தியன் ஆயில், பிபிசிஎல், எச்பி நிறுவனங்களின் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் வழக்கம்போல செயல்பட்டு எரிபொருள் வழங்குகின்றன.

வீட்டு உபயோகம், வா்த்தகம், தொழிற்சாலை நுகா்வோருக்குத் தடையின்றி எல்பிஜி சேவை வழங்கப்படுகிறது. எரிபொருள் தொடா்பான வதந்திகள், சரிபாா்க்கப்படாத தகவல்களால் மக்கள் பீதியடைய வேண்டாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.