பெங்களூரு: பெங்களூரில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை இல்லை என்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பெங்களூரில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை இருப்பதாக தகவல் பரவியதால், எரிபொருள் நிலையங்களில் குவிந்த மக்கள் பெட்ரோல், டீசலை வாகனங்களில் நிரப்பி வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளர் சித்தார்த் அகர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கர்நாடகத்தில் உள்ள பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் எல்லா சில்லறை வர்த்தக நிலையங்களிலும் போதுமான அளவுக்கு பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளது. மேலும், எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள், மொத்த விற்பனைக் கிடங்குகளில் இருந்து சில்லறை வர்த்தக நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது.
இதில் எவ்வித தடங்கலும், இடைஞ்சலும் இல்லை. எரிபொருள் விநியோகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் எரிபொருள் மறுநிரப்பு செயல்பாடுகளும் சீராக உள்ளன. எல்லா சில்லறை வர்த்தக நிலையங்களும் இயல்பாக செயல்பட்டு வருகின்றன.
கர்நாடகத்தில் உள்ள நுகர்வோரின் தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு எரிபொருள் இருப்பு உள்ளது. எனவே, எரிபொருள் தட்டுப்பாடு என்ற அச்சத்தில் யாரும் பெட்ரோல், டீசலை அதிகளவில் வாகனத்தில் நிரப்பிக்கொள்ள வேண்டாம். மாநிலம் முழுவதும் தங்குத் தடையில்லாமல் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதால், யாரும் பயப்பட வேண்டாம். எனவே, வழக்கம்போல எரிபொருளை பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெட்ரோல், டீசல் நுகா்வைக் கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு துறைகளுக்குக் கட்டுப்பாடு
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயா்வு: 5 நாள்களில் இரண்டாவது முறை

கடும் நெருக்கடி நிலையிலும் இந்தியாவில் சீரான எரிபொருள் விநியோகம்: பெட்ரோலியத் துறை அமைச்சா் புரி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

