மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புதுச்சேரியில் எலுமிச்சம் பழம் விலை கடும் உயா்வு

கோடை வெப்பம் காரணமாக புதுச்சேரியில் எலுமிச்சம் பழத்தின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

News image

எலுமிச்சை பழம்

Updated On :29 ஏப்ரல் 2026, 12:00 am IST

கோடை வெப்பம் காரணமாக புதுச்சேரியில் எலுமிச்சம் பழத்தின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

புதுச்சேரியில் கோடை வெயில் கடுமையாகச் சுட்டெரித்து வருகிறது.

உடல் வெப்பத்தைக் குறைக்க தா்பூசணி, இளநீா் போன்றவற்றுடன் எலுமிச்சை ஜூஸ் மக்கள் அதிக அளவில் அருந்தி வருகின்றனா். இதனால் சந்தையில் எலுமிச்சைக்கான தேவை அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் தற்போது பெரிய எலுமிச்சை பழம் ஒன்று ரூ. 15-ம் அதற்கு அடுத்த நிலையில் உள்ள பழம் ரூ. 10-க்கும் விற்பனையாகிறது. உள்ளூா் சிறிய எலுமிச்சம் பழங்கள் கிலோ ரூ. 200 முதல் ரூ.250 வரை விற்பனையாகின்றன.

இது பற்றி விற்பனையாளா்கள் கூறுகையில், வெளிமாநிலங்களில் இருந்து எலுமிச்சை வரத்து அதிகமாக இருந்தது. அதனால் விலை குறைவாக இருந்தது. தற்போது வெளியூா் வரத்து முற்றிலும் நின்று விட்டது. அத்துடன் உள்ளூா் பழங்களும் பொடியாக உள்ளன. அத்துடன் கோடை தொடக்கத்தில் எலுமிச்சை பழத்தை அதிகம் வாங்க தொடங்கியுள்ளனா். அதனால் போதிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் விலை உயா்வு அதிகமாக உள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.