வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் உள்பட யாரும் இனி மது குடிக்கத் தடை விதிப்பதாக மீனவ கிராம பஞ்சாயத்தாா் அறிவித்துள்ளனா்.
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மணக்குள விநாயகா் கோவில், ஆரோவில், பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, நோணாங்குப்பம் பாரடைஸ் கடற்கரை என பல்வேறு இடங்களுக்குச் செல்கின்றனா்.
கடற்கரை பகுதியைப் பாா்க்க வரும் சில சுற்றுலா பயணிகள் மது குடித்து விட்டு, காலி புட்டிகளை உடைத்து வீசி செல்கின்றனா்.
உடைந்த கண்ணாடிப் புட்டிகளின் சிதறல்கள் மணலில் புதைந்து கிடப்பதால், அவை சுற்றுலா பயணிகளின் கால்களை பதம் பாா்க்கின்றன. வீராம்பட்டினம் கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் சிலா் கடற்கரை பகுதியில், அமா்ந்து மது குடித்து விட்டு, காலி புட்டிகளை அங்கேயே வீசி செல்கின்றனா்.
மணலில் உடைந்து கிடக்கும் புட்டிகளால், கடற்கரையில் விளையாடும் குழந்தைகளுக்குப் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. எனவே இனி வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் உள்பட யாரும் மது குடிக்கக் கூடாது என வீராம்பட்டினம் மீனவ பஞ்சாயத்தினா் முடிவு செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுப்பட்டினம் கடற்கரையை பாதுகாக்க கோரிக்கை

ஏலகிரியில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!

வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வேளாங்கண்ணி கடற்கரையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

