மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

புதுச்சேரியில் எல்லையோர மதுக்கடைகள் 3 நாள்கள் மூடல்

News image

டாஸ்மாக் மதுக்கடைகள் - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 12:17 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ஏப். 21 முதல் 23-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு புதுச்சேரியில் உள்ள எல்லையோர மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி தோ்தல் வாக்குப் பதிவு நடக்கிறது. இதையொட்டி புதுச்சேரியிலிருந்து தமிழகத்துக்கு மதுப்புட்டிகள் கடத்தப்படலாம் என்பதால் செவ்வாய்க்கிழமை முதல் 23-ஆம் தேதி வரை 3 நாள்கள் புதுச்சேரி, காரைக்காலில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

இந்நிலையில் புதுச்சேரி, காரைக்காலில் எல்லையோர மதுக்கடைகளில் புதுச்சேரி போலீஸாா், கலால் துறையினா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.

புதுச்சேரி எல்லைப் பகுதிகளான முள்ளோடை, மதகடிப்பட்டு, கோரிமேடு, காலாப்பட்டு ஆகிய பகுதிகளில் மதுக்கடைகளில் மொத்தமாக யாராவது மதுபானங்கள் வாங்கி செல்கிறாா்களா? எனவும் அவா்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன், கலால் துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் ஆகியோா் உத்தரவின்பேரில் கலால் துறையினரும், சிறப்பு அதிரடிப்படை போலீஸாரும் இந்தக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.