மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புதுச்சேரியில் வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

லாஸ்பேட்டை அரசு மகளிா் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் அறைக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினா்.

News image

~

Updated On :11 ஏப்ரல் 2026, 1:55 am IST

புதுச்சேரி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை இரவு ‘சீல்’ வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இவை, லாஸ்பேட்டையில் அமைந்துள்ள தாகூா் கலைக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மகளிா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைத்து அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

இந்த 3 மையங்களுக்கு புதுச்சேரி ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியுமான அ. குலோத்துங்கன் தலைமையில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சென்றனா். அங்கு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் ப ாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

மேலும் இங்கு 24 மணி நேரமும் உள்ளூா் காவலா்கள் மற்றும் மத்திய துணை ராணுவப் படையினரின் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியா் சுதாகா் உள்ளிட்ட தோ்தல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனா்.

காரைக்கால் பிராந்தியத்திலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு வாக்கு எண்ணும் மையமும், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள தலா ஒரு தொகுதிக்கு தலா ஒரு வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.