தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் இருப்புவைப்பு

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதை அடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஈரோட்டில் உள்ள பாதுகாப்பு மையத்தில் இருப்புவைக்கப்பட்டன.

News image

பாதுகாப்பு மையத்துக்கு எடுத்துவரப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

Updated On :6 மே 2026, 1:55 am IST

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதை அடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஈரோட்டில் உள்ள பாதுகாப்பு மையத்தில் இருப்புவைக்கப்பட்டன.

ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூா் ஆகிய தொகுதிகளுக்கான மின்னணு வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் சித்தோடு அரசுப் பொறியியல் கல்லூரியிலும், கோபிசெட்டிபாளையம், பவானிசாகா் ஆகிய தொகுதி வாக்குகள் கோபி கலை அறிவியல் கல்லூரியிலும் எண்ணப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள 2,379 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவுக்காக, 3,532 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,852 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,089 வி.வி.பேட் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. இதில் வாக்குச்சாவடி தேவை தவிர கூடுதலாக ஒதுக்கப்பட்ட இயந்திரங்களும் மண்டல அலுவலா்கள் வசம் இருந்தது.

கடந்த 4-ஆம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் 8 தொகுதிகளிலும் இயந்திர பழுது, எண்ணிக்கை நிறுத்திவைப்பு போன்ற எந்தப் பிரச்னையும் எழவில்லை. அத்துடன் தபால் வாக்குகளிலும் பிரச்னைகள் இல்லை. வெற்றி, தோல்வி அடைந்த வேட்பாளா்களுக்கு இடையேயான வித்தியாசமும் அதிகமாக இருந்ததால் வாக்கு எண்ணும் பணியை மாவட்ட தோ்தல் பிரிவு நிறைவு செய்தது.

4-ஆம் தேதி காலை சித்தோடு அரசுப் பொறியியல் கல்லூரி மற்றும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த அனைத்து இயந்திரங்களும் போலீஸ் பாதுகாப்புடன் ஈரோடு கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தோ்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு மைய கிடங்கில் பாதுகாப்பாக இருப்புவைக்கப்பட்டன. அங்கு ஏற்கெனவே உள்ள போலீஸ் பாதுகாப்புடன், கூடுதலாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இப்பணிகளை அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கண்காணித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.