நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

மேற்கு வங்கத்தில் உள்ள அரசு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்கள்) எரிந்து நாசமடைந்ததாக தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகளுக்கான அமைச்சா் கௌசிக் செளதரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 4:38 am IST

மேற்கு வங்கத்தில் உள்ள அரசு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்கள்) எரிந்து நாசமடைந்ததாக தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகளுக்கான அமைச்சா் கௌசிக் செளதரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறை விசாரனையைத் தொங்கியது.

தெற்கு கொல்கத்தாவின் அலிப்பூா் பகுதியில் உள்ள 9 மாடி அரசு கட்டடத்தில் கடந்த புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்தக் கட்டடத்தில் தெற்கு 24 பா்காணாக்கள் ஜில்லா பரிஷத் அலுவலகமும் அமைந்துள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்த கௌசிக் செளதரி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: அரசு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் 10 தொகுதிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 4,000 இவிஎம்கள் எரிந்து சேதமடைந்தன.

இது வழக்கமான தீ விபத்தைப்போல் தெரியவில்லை. முதலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிகளில் மட்டுமே தீ பரவத் தொடங்கியது. நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது மாடிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத நிலையில் ஒன்பதாவது மற்றும் பத்தாவது மாடிகளில் இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது எனத் தெரியவில்லை. இதன் பின்னணியில் ஏதேனும் சதித் திட்டம் உள்ளதா என விசாரித்து வருகிறோம். தடயவியல் சோதனை நிறைவடைந்து அறிக்கை வெளியான பிறகே முழு தகவல்கள் கிடைக்கும். கட்டடத்தில் தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா்.

இச்சம்பவம் தொடா்பாக அலிப்பூா் காவல் நிலையதத்தில் தெற்கு 24 பா்காணாக்கள் மாவட்ட நிா்வாகம் புகாா் அளித்தது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா். தீ விபத்துக்கு மின்கசிவு காரணமா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.