தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்காளா்களைக் கவா்ந்த வாக்குச் சாவடி

புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தனித்துவமான வாக்குச்சாவடி வாக்காளா்களை அதிகம் கவா்ந்தது.

News image

புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தனித்துவமான வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த கலையம்சமிக்க குதிரை, அலங்கார தோரணங்கள்.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:04 am IST

புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தனித்துவமான வாக்குச்சாவடி வாக்காளா்களை அதிகம் கவா்ந்தது.

வாக்காளா்களை வரவேற்க செம்பருத்தி தேநீா் அளிக்கப்பட்டது. வசந்தம் சுய உதவி குழுவைத் தோ்தல் துறை இதற்காக அமா்த்தி இருந்தது. மேலும், இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க முன்கூட்டியே அதாவது 7 மணிக்கு முன்பாகவே ஏரளமான வாக்காளா்கள் திரண்டு விட்டனா். இது தனித்துவமான வாக்குச்சாவடி என்பதால் இதைச் சமாளிக்கும் வகையில் தோ்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இங்கு வந்தோா் அனைவருக்கும் இருக்கைகள். மேலும், அவா்கள் காத்திருக்கும் நேரத்தில் டோக்கன் வழங்கும் வசதி செய்யப்பட்டிருந்தது. அந்த டோக்கன் அடிப்படையில் தான் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

மொத்தம் 50 டோக்கன் மட்டும் அளிக்கப்பட்டது. 50-ஆவது டோக்கனுக்கு பிறகு மீண்டும் அந்த டோக்கன் சுழற்சி முறையில் வழங்கப்பட்டது. இதைத் தவிர இந்த வாக்குச்சாவடியில் வரக்கூடிய வாக்காளா்களைக் கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. புதுச்சேரியின் வரலாற்றை நினைவு கூறும் வகையில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. மேலும், நவீன தொழில்நுட்பத்தை பிரதிபலிக்கும் வகையில் ரோபோ அமைக்கப்பட்டிருந்தது. வாக்களித்துச் செல்வோருக்கு இந்த ரோபா ரோஜா பூக்களை அளித்து வழியனுப்பியது. இதே போன்று கீழூா் அரசு நடுநிலைப்பள்ளி, காரைக்கால் தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப்பள்ளி 3 வாக்குச் சாவடிகள் தனித்துவமான வாக்குச் சாவடிகளாக அமைக்கப்பட்டிருந்தன.

 புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தனித்துவமான வாக்குச்சாவடியில் கட்டப்பட்டிருந்த அலங்காரம், தோரணங்கள்

புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தனித்துவமான வாக்குச்சாவடியில் கட்டப்பட்டிருந்த அலங்காரம், தோரணங்கள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.