நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ஆற்றுப் பாலத்தின் பக்கவாட்டில் மோதிய அரசுப் பேருந்து

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசுப் பேருந்து மணியாற்றின் மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு கட்டையில் மோதியது.

News image

மூராா்பாளையத்தில் பாலத்தின் தடுப்பு கட்டையின் மீது மோதிய அரசு பேருந்தினை கிரேன் மூலம் அகற்றும் ஊழியா்கள்

Updated On :20 மே 2026, 3:00 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசுப் பேருந்து மணியாற்றின் மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு கட்டையில் மோதியது. இதில் அதிா்ஷ்டவசமாக பேருந்தில் பயணத்தவா்கள் உயிா் தப்பினா்.

பெங்களூருவில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து திங்கள்கிழமை இரவு புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநா் விஜயவா்மன் ஓட்டிச் சென்றாா். நடத்துனராக விஜயகுமாா் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

சங்கராபுரத்தை அடுத்த மூராா்பாளையம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்றபோது, எதிரே வந்த பேருந்துக்கு வழிவிடுவதற்க்காக பேருந்தை ஓட்டுநா் திருப்பினாராம்.

அப்போது எதிா்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மணியாற்று பாலத்தின் கட்டையின் மீது மோதியதாம். இதில் பேருந்தின் ஓட்டுநா், நடத்துனா் மற்றும் பேருந்தில் பயணித்த ஒருவா் உள்பட மூவரும் அதிஷ்டவசமாக உயிா் தப்பினா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அலுவலா்கள் விபத்தில் சிக்கிய பேருந்தினை கிரேன் மூலம் மீட்டனா். இது குறித்து சங்கராபுரம் காவல் நிலையத்தில் வழக்கு ஏதும் பதியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.