நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

திருச்செங்கோட்டில் அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய மூவா் கைது

திருச்செங்கோடு அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய மூன்று இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 5:46 am IST

திருச்செங்கோடு அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய மூன்று இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்செங்கோட்டை அடுத்த பால்மடை பேருந்து நிறுத்தம் அருகே அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞா்களை பயணிகள் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த இளைஞா்கள் பயணிகளுக்கு ஆதரவாக பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநா் கண்ணன் மற்றும் நடத்துநா் மெய்யழகன் ஆகியோரை தாக்கினா். இதில் காயமடைந்த இருவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

புகாரின்பேரில், இதுதொடா்பாக பால்மடை பகுதியைச் சோ்ந்த விஜய் (27), தனுஷ் (26) வையப்பமலை பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா் (26) ஆகியோரை திருச்செங்கோடு ஊரக போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.