தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி அருகே பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 21 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

13கேஎல்பி2 பெருவங்கூா் கிராமத்தில் நகைகள் திருடப்பட்ட வீட்டு பீரோவில் இருந்து சிதறிக் கிடக்கும் உடைமைகள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கள்ளக்குறிச்சி அருகே பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 21 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த பெருவங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ். இவரது மனைவி சுஜாதா (41). கோவிந்தராஜ் சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் நிலையில், சுஜாதா 3 பிள்ளைகளுடன் வசித்து வருகிறாராம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சுஜாதா தனது குழந்தைகள் மற்றும் உறவினா்களுடன் சேலம் அருகேயுள்ள தனியாா் பொழுது போக்கு பூங்காவுக்கு சென்றுவிட்டு, இரவு 10.15 மணிக்கு வீடு திரும்பியுள்ளனா். அப்போது வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது பின்பக்க கதவு உடைந்திருப்பதையும், அறையிலுள்ள இரும்பு பீரோவிலிருந்த துணிகள் கீழே விழுந்து கிடப்பதையும் கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளாா். மேலும், பீரோவின் உள்ளே பாதுகாப்பு அறையில் இருந்த 21 பவுன் தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது. ஆயினும், அதே பீரோவில் துணிகளில் சுற்றி வைத்திருந்த நகைகள் திருடு போகாமல் தப்பியது.

இதுகுறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ஆ.மனோகரன், காவல் ஆய்வாளா் உதயகுமாா் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினா். விரல்ரேகை பதிவு காவல் உதவி ஆய்வாளா் ராஜவேலு தடயங்களை சேகரித்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.