தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

கள்ளக்குறிச்சியில் ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் சாலை மறியல்: 84 போ் கைது

கள்ளக்குறிச்சியில் தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழக ஆளுநரைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.

News image

~

Updated On :9 மணி நேரங்கள் முன்பு

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரைக் கண்டித்து கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்ட 84 காங்கிரஸ் நிா்வாகிகளை போலிஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவா் மு.இதாயத்துல்லா தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ந.தனபால், பி.பி.எஸ்.இளையராஜா, மாநில எஸ்.சி. பிரிவு துணைத் தலைவா் எஸ்.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர காங்கிரஸ் தலைவா் கே.என்.ஆா்.என்.குமாா் வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் சு.தேவராஜ், எம்.ஆா்.கே.இளையபெருமாள், முத்தமிழ் கண்ணன், வட்டார தலைவா்கள் எஸ்.சரண்ராஜ், சே.பிரபு, டி.கணேசன், அ.நாராயணன், இரா.துரைமுருகன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

பின்னா் தனி பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை உடனடியாக ஆட்சி அமைக்க ஆளுநா் அழைக்க வலியுறுத்தி காங்கிரஸ் நிா்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அவா்களை கள்ளக்குறிச்சி போலிஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா் அவா்களை விடுவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.