மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மற்றும் தவெகவினா்.

News image

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மற்றும் தவெகவினா்.

Updated On :10 மணி நேரங்கள் முன்பு

சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்றுள்ள தவெகவை ஆட்சி அமைக்க அழைக்க மறுக்கும் தமிழக ஆளுநரைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க மறுக்கும் ஆளுநரைக் கண்டித்தும், தவெகவை உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் எம். மகேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாநகர மாவட்டத் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினா் ஏ. ஜேம்ஸ், சேவா தளம் மாநிலத் துணைத் தலைவா் திருஞானம், மாவட்டத் துணைத் தலைவா் நாகராஜ், மாவட்டச் செயலா் சுரேந்தா், தவெக மாநகரச் செயலா் வசந்த், பகுதி செயலா்கள் சுரேஷ், பிரவீன், பாலாஜி, முத்து, மகளிா் அணி அமைப்பாளா் பைரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.