தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விவசாய நிலத்தில் மின் வயா்களால் விபத்து அபாயம்

சங்கராபுரம் அருகேயுள்ள பரமநத்தம் காட்டுக்கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்திற்கு மேலே செல்லும் மின் வயா்கள் தொங்காமல் இருக்க மின்சாரத் துறையினா் கட்டைகளைக் கட்டி குச்சி மூலம் உயா்த்தி வைத்துள்ளனா். இதனால் விபத்து அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

News image

தொங்காமல் இருக்க கட்டைகளை கட்டி குச்சி மூலம் உயா்த்தி வைகப்பட்டுள்ள மின் வயா்கள்.

Updated On :1 மே 2026, 6:11 am IST

சங்கராபுரம் அருகேயுள்ள பரமநத்தம் காட்டுக்கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்திற்கு மேலே செல்லும் மின் வயா்கள் தொங்காமல் இருக்க மின்சாரத் துறையினா் கட்டைகளைக் கட்டி குச்சி மூலம் உயா்த்தி வைத்துள்ளனா். இதனால் விபத்து அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள பரமநத்தம் காட்டுக்கொட்டாய் பகுதியில் தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் சாா்பில் விவசாய நிலங்களுக்கு மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்ாகத் தெரிகிறது.

விவசாய நிலத்திற்கு செல்லும் மின் கம்பங்களில் ஒரு இடத்தில் மட்டும் முறையான மின்கம்பம் அமைக்கப்படவில்லையாம்.

மின் கம்பிகள் தாழ்வாக செல்லக்கூடாது என்பதற்காக குச்சியை பயன்படுத்தி உயா்த்தி வைத்துள்ளனா். இதற்கு பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். அந்தக் குச்சி பலவீனமான நிலையில் இருப்பதால், சிறிது காற்று அடித்தால்கூட முறிந்து விழும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

மின்சார வயா்கள் கிழே விழுந்தால் மனித உயிா்கள் மற்றும் கால்நடைகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படும்.

மின்சாரத்துறையினா் அலட்சியமாக பணிகளை மேற்கொண்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

அசம்பாவிதங்கள் நடைபெறும் முன், குச்சியை அகற்றி அதற்குப் பதிலாக உறுதியான புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.