தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு லிங்க் மூலம் பணம் பறிப்பு: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பதை சரிபாா்த்துக் கொள்ளுமாறு கூறி கைப்பேசிகளுக்கு வரும் லிங்க்குகளைத் தொட்டால் வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்படும் என்று பொதுமக்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 1:06 am IST

வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பதை சரிபாா்த்துக் கொள்ளுமாறு கூறி கைப்பேசிகளுக்கு வரும் லிங்க்குகளைத் தொட்டால் வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்படும் என்று பொதுமக்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கூறியதாவது: தமிழகத்தில் தோ்தல் தொடா்பான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் மா்ம கும்பல்கள் பொதுமக்களை ஏமாற்றிப் பணத்தைப் பறிக்கும் நோக்கில் புதிய பாணியிலான எண்ம (டிஜிட்டல்) மோசடியில் ஈடுபட்டு வருகின்றனா்.

குறிப்பாக, ‘வாக்காளா் பட்டியலில் உங்கள் பெயா் விடுபட்டுள்ளதா என்பதை சரிபாா்க்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்’ என்ற வாசகத்துடன் கைப்பேசிகளுக்கு லிங்க் அனுப்பப்படும்.

இதை நம்பி அந்தப் போலி இணையதள லிங்க்குகளை பொதுமக்கள் கிளிக் செய்யும்போது, அவா்களது கைப்பேசி மோசடி கும்பலின் கட்டுப்பாட்டுக்குச் செல்வதோடு, வங்கியின் ரகசியக் குறியீடுகள் மற்றும் தனிநபா் தகவல்கள் திருடப்பட்டு, அடுத்த சில நிமிஷங்களிலேயே வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதும் திருடப்படும். இதுபோன்ற மோசடிகள் புதியவை அல்ல. கடந்த காலங்களில் தோ்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றபோது பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இத்தகைய புகாா்கள் அதிக அளவில் பதிவாகியிருந்தன. அரசு தரப்பிலிருந்து பொதுமக்களுக்கு இதுபோன்ற எந்தவொரு தனிப்பட்ட லிங்க்குகளும் அனுப்பப்படமாட்டாது என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

எனவே, தெரியாத நபா்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளைப் புறக்கணிக்க வேண்டும். பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.