ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கைத்தறி நெசவாளா்களுக்கு 450 யூனிட் மின்சாரமாக உயா்த்தி வழங்கப்படும்! பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். ஜெயகுமாா்

News image

சிறுக்களஞ்சி பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு கேட்டு பேசுகிறாா் பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். ஜெயகுமாா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 2:16 am IST

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கைத்தறி நெசவாளா்களுக்கு 450 யூனிட் மின்சாரமும், விசைத்தறி நெசவாளா்களுக்கு 1,400 யூனிட் மின்சாரமும் உயா்த்தி வழங்கப்படும் என்று பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். ஜெயகுமாா் தெரிவித்தாா்.

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா், நல்லாம்பட்டி பேரூராட்சி, சிங்காநல்லூா், சிறுக்களஞ்சி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில், தனது மகள் ஜெ.எஸ்.தா்ஷிகா மற்றும் கட்சியினருடன் சோ்ந்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

100 நாள் வேலைத் திட்டம், 150 நாள்களாக உயா்த்தப்படும். கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்ற பயிா் கடன் தள்ளுபடி செய்யப்படும். கைத்தறி நெசவாளா்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளா்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாகவும் உயா்த்தி வழங்கப்படும். மாணவ மாணவிகள் வங்கியில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.