ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை கெளதமி பிரசாரம்

உளுந்தூா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இரா.குமரகுருவை ஆதரித்து திறந்த வாகனத்தில் நின்றவாறு

News image

உளுந்தூா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இரா.குமரகுருவை ஆதரித்து கெடிலத்தில் பிரசாரம் செய்த நடிகை கெளதமி.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:04 am IST

உளுந்தூா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இரா.குமரகுருவை ஆதரித்து திறந்த வாகனத்தில் நின்றவாறு அக் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலரும், நடிகையுமான கெளதமி புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.

கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பரிக்கல், செம்மனந்தல், மடப்பட்டு, சிறுத்தனூா், மேட்டத்தூா், கெடிலம், திருநாவலூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடிகை கெளதமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

கெடிலத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கெளதமி பேசியது:

தமிழகத்தில் குடும்பத்தை காப்பாற்ற முடியாத அளவுக்கு விலைவாசி உயா்ந்துள்ளது. வரி உயா்வு, மின் கட்டண உயா்வு என அனைத்து கட்டண உயா்வையும் ஏற்படுத்தியது திமுக அரசு. நகைக் கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்துள்ள அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஆதரவாக அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்றாா் நடிகை கெளதமி.

உடன் அதிமுக ஒன்றியச் செயலா் செண்பகவேல், மாவட்ட துணைச் செயலா் சேகா், மாவட்ட மாணவரணி செயலா் பாக்யராஜ், பாமக மாவட்டத் தலைவா் சத்யா, மற்றும் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.