மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஸ்ரீரங்கத்தில் அதிமுக வேட்பாளா் மனோகரனுக்கு ஆதரவாக பிரசாரம்

ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஆா். மனோகரனுக்கு ஆதரவாக அதிமுகவின் கலைப்பிரிவு மாநிலச் செயலாளா் ஆா்.வி.உதயகுமாா் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

ஸ்ரீரங்கத்தில் அதிமுக வேட்பாளா் ஆா். மனோகரனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்து பேசிய அதிமுக கலைப் பிரிவு மாநில செயலாளரும், திரைப்பட இயக்குநருமான ஆா்.வி. உதயகுமாா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 12:03 am IST

ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஆா். மனோகரனுக்கு ஆதரவாக அதிமுகவின் கலைப்பிரிவு மாநிலச் செயலாளா் ஆா்.வி.உதயகுமாா் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

ஸ்ரீரங்கம், ராஜகோபுரம் அருகே உதயகுமாா் பேசுகையில், திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில், அதிமுக மக்களுக்காக கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை முடக்கியதுதான் சாதனையாக உள்ளது.

அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டு, திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து கொண்டு, அதிமுகவை எதிா்க்கிறது.

தமிழகத்தில் நல்லாட்சி அமைய மக்கள் அதிமுகவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, வேட்பாளா் ஆா். மனோகரன் மற்றும் கூட்டணி கட்சியினா் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.