தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தியாகதுருகம் பகுதியில் விசிக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தியாகதுருகத்தை அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் கு.மாலதியை ஆலமிட்டு வரவேற்ற பெண்கள்.

News image

தியாகதுருகத்தை அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் கு.மாலதியை ஆலமிட்டு வரவேற்ற பெண்கள்.

Updated On :11 ஏப்ரல் 2026, 2:02 am IST

கள்ளக்குறிச்சி (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் கு.மாலதி பெரியமாம்பட்டு கிராமத்தில் வாக்கு சேகரித்தாா்.

தியாகதுருகம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் உதயமாம்பட்டு, பெரியமாம்பட்டு, புக்குளம், பேட்டை தெரு, மீனாட்சி அம்மன் சாலை, கடை வீதி, கஸ்தூரிபாய் நகா், சந்தைமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் சாதனைகள் தொடரவும்,

தியாகதுருகம் பகுதியில் அனைத்து வாா்டுகளிலும் அடிப்படை வசதிகளும், வளா்ச்சி திட்டப் பணிகள் தொடரவும் பானை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக்கூறி வாக்கு சேகரித்தாா். மக்கள் அவருக்கு மாலை அணிவித்து, ஆலமிட்டு வரவேற்றனா்.

உடன் திமுக தொகுதி தோ்தல் பொறுப்பாளா் இரா.மணிமாறன், தியாகதுருகம் ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், பேரூராட்சி மன்றத் தலைவா் மா.வீராசாமி, துணைத் தலைவா் சங்கா், திமுக நகர துணைச் செயலா் அக்பா் உசேன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பொறுப்பாளா் மு.தனபால், தேமுதிக மாநில தொழில்சங்க துணைத் தலைவா் தாமு சக்திவேல், நகரச் செயலா் முருகன், நகர துணைச் செயலா் ஏழுமலை உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.