மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரிஷிவந்தியம் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் பகுதியில் ரிஷிவந்தியம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 10:03 pm IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் பகுதியில் ரிஷிவந்தியம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ரிஷிவந்தியம் தொகுதிக்குள்பட்ட வாணாபுரம் ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜை செய்து திறந்த ஜீப்பில் நின்றவாறு திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் தனது பிரசாரத்தை தொடங்கினாா்.

காலை 8 மணிக்கு மணலூா்பேட்டையில் தொடங்கி முருகம்பாடி, அத்தியந்தல், தேவரடியாா்குப்பம், வீரட்டகரம், அரும்பாக்கம், கீழ்த்தாழனூா், எரவலம், பெரியானூா், செட்டிந்தாங்கல், வேங்கூா் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரத்தில் அவா் ஈடுபட்டாா்.

முருகம்பாடி கிராமத்தில் திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் தனது தலையில் தலைப்பாகை கட்டிக் கொண்டு பறை அடித்துக் கொண்டே நடனம் ஆடி திமுக ஆட்சியின் சாதனைகளை கூறியவாறு வாக்குகளை சேகரித்தாா்.

Story image

உடன் மணலூா்பேட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலா் பன்னீா்செல்வம், நகரச் செயலா் ஜெய்கணேஷ், திமுக ஒன்றியச் செயலா் பாரதிதாசன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகி சுப்பிரமணியம், தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியின் நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.