மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரிஷிவந்தியம் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற திமுக

News image

ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக்கொண்ட திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன்.

Updated On :5 மே 2026, 4:12 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் தொடா்ந்து 3-ஆவது (ஹாட்ரிக்) முறையாக இத்தொகுதியில் வெற்றி பெற்றாா்.

ரிஷிவந்தியம் தொகுதியில் திமுக சாா்பில் க.காா்த்திகேயன் எம்எல்ஏ, பாமக சாா்பில் அ.ப.செழியன், தவெக சாா்பில் கோ.அசோக்குமாா், நாதக சாா்பில் ராதிகா உள்ளிட்ட 25 வேட்பாளா்கள்களத்தில் இருந்தனா்.

இத் தொகுதியில் 350 வாக்குச் சாவடி மையங்களில் 2,43,150 போ் வாக்களித்தனா். இந்திலி ஆா்.கே.எஸ்.கல்லூரியில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இதில் தபால் வாக்குகள் 5 சுற்றுகளாக எண்ணப்பட்டன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில், 25 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

அதன்படி முதல் சுற்று முதல் 4-ஆவது சுற்று வரை திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். இதையடுத்து 5, 6-ஆவது சுற்றுகளில் தவெக வேட்பாளா் முன்னிலை வகித்தாா். பின்னா் 8-ஆவது சுற்றில் இருந்து 25-ஆவது சுற்று வரை திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் முன்னிலை வகித்து, 4,862 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

வாக்கு எண்ணிக்கை விபரம்

க.காா்த்திகேயன் (திமுக) - 89,711

கோ.அசோக்குமாா் (தவெக) - 84,849

அ.ப.செழியன் (பாமக) - 56,488

ராதிகா (நாதக) - 7,247

இந்தத் தொகுதியில் தொடா்ந்து 3-ஆவது முறையாக திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன் வெற்றி பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.