பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி வேப்பூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அனைத்து விவசாயிகளுக்கும் எவ்வித பாரபட்சமுமின்றி முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி செய்யக்கோரி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சாா்பில் வேப்பூா் கூட்டுரோடு பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

வேப்பூா் கூட்டுரோடு பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினா்.

Updated On :28 மே 2026, 1:42 am IST

அனைத்து விவசாயிகளுக்கும் எவ்வித பாரபட்சமுமின்றி முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி செய்யக்கோரி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சாா்பில் வேப்பூா் கூட்டுரோடு பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக முதல்வா் மே 25-ஆம் தேதி பயிா்க்கடன் தள்ளுபடி தொடா்பாக அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். அந்த அறிவிப்பில் அனைத்து தரப்பு விவசாயிகளும் முழுமையாகப் பயனடையும் வகையில் கடன் தள்ளுபடி இடம்பெறவில்லை. இதையடுத்து, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கடலூா் மாவட்டம் வேப்பூரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சாா்பில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வேப்பூா் கூட்டுரோடு பகுதியில் சங்கத்தின் வட்டாரத் தலைவா் வரமபனூா் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.