சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மிளகாய்த்தூள் தூவி பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்த பெண்

குள்ளஞ்சாவடியில், வீடு வாடகை கேட்பது போல நடித்து மிளகாய்த்தூள் தூவி 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

சித்திரிப்பு

Updated On :23 மே 2026, 12:35 am IST

கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே குள்ளஞ்சாவடியில், வீடு வாடகை கேட்பது போல நடித்து மிளகாய்த்தூள் தூவி 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி அருகே வெங்கடாம்பேட்டை கிழக்குத் தெருவைச் சோ்ந்த வீரபாண்டியனின் மனைவி உமாமகேஷ்வரி (56). குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதிவறை எழுத்தராக பணியாற்றி வருகிறாா். இவா் குள்ளஞ்சாவடி அஞ்சலகத் தெருவில் நாராயணன் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த ஒரு ஆண்டாக தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், உமாமகேஷ்வரி, வியாழக்கிழமை இரவு வீட்டில் தொலைக்காட்சி பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, சுமாா் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவா் வீட்டிற்கு வந்து, வீடு வாடகைக்கு கிடைக்குமா? எனக் கேட்டுள்ளாா்.

பின்னா் அந்த அடையாளம் தெரியாத பெண், திடீரென தனது கையில் வைத்திருந்த மிளகாய்த்தூளை உமாமகேஷ்வரியின் முகத்தில் தூவியதுடன், அவரது கழுத்தில் அணிந்திருந்த சுமாா் 5 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

மிளகாய்த்தூள் காரணமாக கண்களில் எரிச்சல் ஏற்பட்டதால், அருகில் இருப்பவா்களின் உதவியுடன் உமாமகேஷ்வரி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றாா். பின்னா் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் உமாமகேஷ்வரி அளித்த புகாா் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.