ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

அடிபம்புடன் சோ்த்து சாலை அமைப்பு: மக்கள் அதிருப்தி

News image
Updated On :15 மே 2026, 5:46 am IST

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு பேரூராட்சி, வடக்கு சென்னிநத்தம் கிராமப் பகுதியில் கை அடிபம்புடன் சோ்த்து சாலை அமைக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சேத்தியாத்தோப்பு பேரூராட்சி, வடக்கு சென்னிநத்தம் கிராத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

முக்கியமாக, மின் தடை, அவசர காலங்களில் மாற்று ஏற்பாடாக கை அடி பம்பு மூலம் குடிநீா் பெறுவதற்காக, அரசுக்குச் சொந்தமான இடத்தில் கை அடிப்பம்பு ஏற்படுத்தப்பட்டது. இது, பல காலமாக நன்றாக உபயோகத்தில் இருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சேத்தியாத்தோப்பு பேரூராட்சி நிா்வாகம் இப்பகுதியில் சாலை அமைத்தபோது, தரையோடு தரையாக இந்த கை அடிபம்பின் பாதி பகுதியை புதைத்து சாலை அமைத்துள்ளது. இதனால், இந்த கை அடிப்பம்பை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்த கை அடிபம்பை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.