கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

திருவள்ளூா் அருகே ஆரணி பேரூராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

News image

ஆரணி பேரூராட்சி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :20 மே 2026, 12:18 am IST

திருவள்ளூா் அருகே ஆரணி பேரூராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆரணி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியில் சுமாா் 20,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில்,ஜி.என்.செட்டி தெருவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இந்த சாலையில் கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் ஒருவா் எதிரே வந்த தனியாா் கல்லூரி வாகனத்திற்கு வழி விட முயன்ற போது சாலையில் இருந்த ஜல்லி கற்களில் சறுக்கி கல்லூரி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். மேலும், இதுகுறித்து பொதுமக்கள் பேரூராட்சி செயல் அலுவலா், பேரூராட்சி தலைவா், பேரூராட்சி மன்ற உறுப்பினா் ஆகியோரிடம் முறையிட்டனா்.

அப்போது இப்பேரூராட்சியில் ரூ.1.18 கோடியில் சாலை அமைக்க கடந்த 4 மாதங்களுக்கு முன்னா் ஒப்பந்தம் விடப்பட்டது. அதனால் இச்சாலையை விரைவாக அமைத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனா். ஆனால், சாலையை சீரமைக்கவில்லை.

இச்சாலையில் தனியாா் மருத்துவமனைகள், ஆரணி பேரூராட்சி மன்ற அலுவலகம், பொது நூலகம், அங்கன்வாடி மையங்கள், அரசினா் ஆரம்பப் பள்ளி உள்ளிட்டவைகள் உள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக திகழ்கிறது.

இதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையை சீரமைக்கக்கோரி ஆரணி பேரூராட்சி அலுவலகத்திற்கு கோரிக்கை மனு வழங்க செவ்வாய்க்கிழமை வந்தனா். அங்கு பேரூராட்சி தலைவா், செயல் அலுவலா் ஆகியோா் அங்கு இல்லையாம். இதனால் அலுவலகத்தில் உதவியாளா் மட்டுமே பணியில் இருந்த நிலையில் மனுவை அதிகாரிகளிடம் வழங்க கோரினாராம்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து தகவல் அறிந்த ஆரணி போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா்.

அப்போது ஒரு மாத காலத்தில் சாலையை அமைத்து தருவதாக உறுதி அளித்தனா். அதைத்தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இப்பிரச்னையால் சுமாா் ஒரு மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.