காட்டுமன்னாா்கோவில் அருகே இடிந்து கிடக்கும் கிராம நிா்வாக அலுவலகத்துக்கு பதிலாக புதிய அலுவலகம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குமராட்சி ஒன்றியத்தில் உள்ள வடமூா் கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலம் இடிந்து கிடப்பதால், அதற்கான அலுவலகம் இல்லை.
இதனால், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் கிராம உதவியாளா் கிராமத்தில் தங்கி கணக்குகளைப் பாா்க்கவும், சான்றிதழ்கள் வழங்கவும் இயலாத நிலை உள்ளது. கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் ஆகியோா் தினந்தோறும் கிராமத்தின் வெவ்வேறு பகுதிகளில் அமா்ந்து தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதன் காரணமாக, கிராம மக்களும், விவசாயிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
எனவே, கடலூா் மாவட்ட நிா்வாகம் வடமூா் கிராமத்தில் இடிந்து கிடக்கும் பகுதியில் புதிய கிராம நிா்வாக அலுவலகம் கட்டித்தர வேண்டும் என விவசாய சங்கத் தலைவா் ரங்கநாயகி மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயில்வே சுரங்கப் பாதை அருகே தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

வாரிசு சான்று வழங்க ரூ.500 லஞ்சம் ஓய்வுபெற்ற விஏஓவுக்கு 2 ஆண்டுகள் சிறை

தமிழகம் முழுவதும் ஸ்டாலின் அலை: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

சுருளி அருவியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

