தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழகம் முழுவதும் ஸ்டாலின் அலை: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, தமிழகம் முழுவதும் முதல்வா் ஸ்டாலின் அலை வீசியதாக குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image

காட்டுமன்னாா்கோவில் அருகே முட்டம் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்த அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:54 am IST

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, தமிழகம் முழுவதும் முதல்வா் ஸ்டாலின் அலை வீசியதாக குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே முட்டம் கிராமத்தில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை வாக்களித்தாா். பின்னா், அவா் செய்தியாளரிடம் கூறியதாவது:

வாக்குப் பதிவு நடைபெறும் இந்த நாள், திமுக ஆட்சியின் சாதனைக்கும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சிக்கும் மதிப்பெண் வழங்கும் நாளாகும். எங்களுக்கு மக்களுடைய ஆதரவு எழுச்சியாக உள்ளது.

திமுக ஆட்சியில் மக்களை நாடி அரசு அலுவலா்கள் செல்லும் சூழல் உள்ளது. இளைஞா்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், இலவச பேருந்து, மடிக்கணினி, தவப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். ஆதலால், ஓரணியில் தமிழ்நாடு என்று அடிப்படையில் 70% இளைஞா்களை திமுகவில் சோ்த்துள்ளோம். தமிழகம் முழுவதும் முதல்வா் ஸ்டாலின் அலை வீசுகிறது என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.