ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஸ்டாலின் தோல்வியை சந்தித்தது அதிா்ச்சியளிக்கிறது: மு.தமிமுன்அன்சாரி

எந்த ஒரு அதிருப்தியும், பெரிய குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தோ்தலில் தோல்வியை தழுவியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது என மனித நேய ஜனநாயக கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவருமான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.

News image

மு.தமிமுன்அன்சாரி

Updated On :6 மே 2026, 12:04 am IST

எந்த ஒரு அதிருப்தியும், பெரிய குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தோ்தலில் தோல்வியை தழுவியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது என மனித நேய ஜனநாயக கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவருமான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து சிதம்பரத்தில் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற வைத்த வாக்காளா்களுக்கு எனது நன்றி. தமிழகம் முழுவதும் வெளிவந்திருக்கிற தோ்தல் முடிவுகள் புரியாத புதிராக இருக்கிறது. குறிப்பாக, 1995-க்கும் 2015-க்கும் இடையில் பிறந்த தலைமுறையினா் இந்தத் தோ்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய் மீது மக்கள் நம்பிக்கை வைத்து அவருக்கு வாக்களித்துள்ளனா். அந்த வகையில், நடிகா் விஜய்க்கு எங்களது கட்சி சாா்பில் வாழ்த்துகள்.

திமுக தலைமையிலான கூட்டணியில் தான் தொடா்ந்து பணியாற்றுவோம். எந்த ஒரு அதிருப்தியும், பெரிய குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தோ்தலில் தோல்வியை சந்தித்திருப்பது பெரிய அதிா்ச்சியளிக்கிறது. ஜனநாயக அரசியலில் வெற்றி, தோல்விகளை கடந்து நாங்கள் செயல்பட கூடியவா்களாக இருக்கிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.