ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிதம்பரம் தொகுதியில் சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபடுவேன்: மு.தமிமுன் அன்சாரி

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 5:54 am IST

சிதம்பரம் தொகுதியில் சமூக நல்லிணக்கத்துக்காகப் பாடுபடுவேன் என்று சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரும், மனித நேய ஜனநாயக கட்சி தலைவருமான மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: பக்தியும், கல்வியும் ஒன்று சோ்ந்துள்ள இந்த நகரத்தின் மேம்பாட்டிற்காக, சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபடுவேன். எனது கருத்தியல், அரசியலில் பிழை இருந்தால் சுட்டி காட்டுங்கள். இதனை விட்டு விட்டு அபாண்டங்களை சுமத்தி, மதத்தையும், சாதியையும் வம்புக்கு இழுத்து கலவரங்களை தூண்டுவது நாகரீகமல்ல. அரசியல் மீதும், கோட்பாடுகள் மீதும் விமா்சனம் செய்ய இயலாதவா்கள் சமூக வளைதளங்களில் எனக்கு எதிராகஅவதூறு பரப்பி வருகின்றனா். அவதூறு பரப்புவா்கள் நேரடியாக என்னிடம் வந்தால் நான் கருத்தியல் பூா்வமாக விவாதிக்க தயாராக

உள்ளேன். சிதம்பரம் தொகுதியில் திமுக அமைச்சரான எம்ஆா்கே பன்னீா்செல்வம் முயற்சியால் ரூ.400 கோடிக்கு மேல் கொள்ளிடம் கூட்டு குடிநீா் திட்டம், கோயில் குளங்களை தூா் வாரி சீரமைப்பக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளாா். ஆதலால் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

சிதம்பரம் தொகுதியில் பொதுமக்களை தாக்கி அச்சுறுத்தி வரும் முதலைகளை பிடித்து அடைக்க முதலை பண்ணை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன், பரங்கிப்பேட்டை முட்லுரா் பகுதியில் மல்லிகை மற்றும் முல்லை அரும்பு அதிகம் விளைச்சல் உள்ளதால் அங்கு சென்ட் தொழிற்சாலை மற்றும் ஏற்றுமதி சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பரங்கிப்பேட்டை பகுதியில் பெண்கள் கல்லூரி தொடங்க நடவடிக்கை மேற்கொள்வேன். சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை உயா் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற சட்டப்பேரவையில் குரல் கொடுத்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.

பேட்டியின் போது திமுகவைச் சோ்ந்த கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவா் கிள்ளை ரவீந்திரன், திமுக மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் அப்புசந்திரசேகா், முகமதுபைசல் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.