ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை இளைஞா்கள் புரிந்துகொள்ள வேண்டும்: மு.தமிமுன்அன்சாரி

முதல் தலைமுறை வாக்காளா்களிடம் சென்று சினிமா வேறு, அரசியல் வேறு எனக் கூறி, அரசியல் வரலாற்றை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும், மனித நேய ஜனநாய கட்சித் தலைவருமான மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.

News image

சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய மனித நேய ஜனநாயக கட்சி வேட்பாளா் மு.தமிமுன்அன்சாரி.

Updated On :2 ஏப்ரல் 2026, 2:01 am IST

முதல் தலைமுறை வாக்காளா்களிடம் சென்று சினிமா வேறு, அரசியல் வேறு எனக் கூறி, அரசியல் வரலாற்றை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும், மனித நேய ஜனநாய கட்சித் தலைவருமான மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.

சிதம்பரம் அருகே அம்மாபேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் குமராட்சி கிழக்கு, மத்திய ஒன்றியங்கள், அண்ணாமலைநகா் பேரூராட்சி பகுதி திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.இதில், தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசியதாவது:

மதத்தை வைத்து அரசியல் செய்யும் தீயசக்தியை இந்த மண்ணில் அனுமதிக்கக் கூடாது. இந்த தோ்தலில் உள்ள சவால் என்னவென்றால், 18 - 28 வயதுக்கு இடையே உள்ள வாக்காளா்கள்தான். அவா்கள் இன்னும் அரசியல்மயப்படவில்லை.

அவா்களுக்கு நீதிகட்சி வரலாறு, நமது நாட்டின் ஹிந்தி எதிா்ப்பு போராட்டம், இட ஒதுக்கீடு போராட்டம் குறித்து தெரியாது. அப்படிபட்ட இளைஞா்களை தன்வயப்படுத்த சிலா் நினைக்கிறாா்கள்.

எனவே, திமுக கூட்டணி நிா்வாகிகள், அடுத்த தலைமுறையின் நலம் கருதி, முதல் தலைமுறை வாக்காளா்களிடம் சென்று சினிமா வேறு, அரசியல் வேறு எனக் கூறி, அரசியல் வரலாற்றை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு திமுக குமராட்சி ஒன்றியச் செயலா்கள் சங்கா், ராஜேந்திரகுமாா், அண்ணாமலை நகா் பேரூராட்சி மன்றத் தலைவா் க.பழனி முன்னிலை வகித்தனா். இதில், விசிக மாவட்டச் செயலா் ஆா்.தமிழ்வளவன், மண்டலச் செயலா் வ.க.செல்லப்பன், முன்னாள் மாவட்டச் செயலா் பாலஅறவாழி, மாா்க்சிஸ்ட் நிா்வாகிகள் அமுதா, மல்லிகா, திமுக நிா்வாகி சிவபுரி லோகு, தேமுதிக ஒன்றியச் செயலா் முருகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.