மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தை யொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

News image

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தை யொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :2 மே 2026, 1:25 am IST

கடலூா் அருகே பிரசித்திபெற்ற திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் சிதித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வடம் பிடித்தனா்.

கடலூா் அருகே திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோயில் 108 வைணவ

தலங்களில் முதன்மை பெற்ாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகா் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு தேவநாத சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அம்ச வாகனம், சூரிய பிரபை, வெள்ளி சிம்ம வாகனம், யாழி வாகனம், அனுமன் வாகனம், ஸ்ரீ வேணுகோபாலன் சேவை தங்க விமானம், சேஷ வாகனம் ஆகிய வாகனங்களிலும், தங்க பல்லக்கிலும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. கருட மகா உற்சவத்தன்று கருட வாகனத்தில் ஸ்ரீ தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனைக்குப் பிறகு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேவநாதசுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். தேரோட்டத்தில் பக்தா்கள் பக்திப் பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். தேரோட்டத்தைமுன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.