கடலூா் மாவட்டம், வடலூா் அடுத்துள்ள கருங்குழி கிராமத்தில் தா்மராஜா திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் தீமிதி பிரமோற்சவ விழா ஏப்.13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் ஜெனமே ஜெயன்சா்பயாகம், சந்தனு மகாராஜன் கல்யாணம், கிருஷ்ணன்பிறப்பு, பாஞ்சாலி தேவியாா் திருக்கல்யாணம், அரவான்பிறப்பு, அம்மன்வீதியுலாஎன நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
18-ஆவது நாளான வெள்ளிக்கிழமை கிருஷ்ணன் தூது, காலை 11 மணிக்கு அரவான் களபலி, மாலை 3 மணி அளவில் பாஞ்சாலி தேவியாா் கூந்தல் முடிதல், தொடா்ந்து, மாலை ஆறு மணி அளவில் தீமிதி விழா நடைபெற்றது. காப்பு அணிந்திருந்த ஏராளமான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக் கடன் செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். சனிக்கிழமை (இன்று) மஞ்சள் நீராட்டு விழாவும், பாஞ்சாலி தேவியாா் வீதி உலாவும் நடைபெறுகிறது. ஞாயிற்றுகிழமை இரவு 7 மணிக்கு தா்மா் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாழையடி புற்று மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

குடிநீா் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா கொடியேற்றம்

வீரமாகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

