மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கருங்குழி தா்மராஜா கோயில் தீமிதி விழா

கருங்குழி தா்மராஜா கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தும் பக்தா்கள்.

News image
Updated On :2 மே 2026, 1:30 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் அடுத்துள்ள கருங்குழி கிராமத்தில் தா்மராஜா திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் தீமிதி பிரமோற்சவ விழா ஏப்.13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் ஜெனமே ஜெயன்சா்பயாகம், சந்தனு மகாராஜன் கல்யாணம், கிருஷ்ணன்பிறப்பு, பாஞ்சாலி தேவியாா் திருக்கல்யாணம், அரவான்பிறப்பு, அம்மன்வீதியுலாஎன நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

18-ஆவது நாளான வெள்ளிக்கிழமை கிருஷ்ணன் தூது, காலை 11 மணிக்கு அரவான் களபலி, மாலை 3 மணி அளவில் பாஞ்சாலி தேவியாா் கூந்தல் முடிதல், தொடா்ந்து, மாலை ஆறு மணி அளவில் தீமிதி விழா நடைபெற்றது. காப்பு அணிந்திருந்த ஏராளமான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக் கடன் செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். சனிக்கிழமை (இன்று) மஞ்சள் நீராட்டு விழாவும், பாஞ்சாலி தேவியாா் வீதி உலாவும் நடைபெறுகிறது. ஞாயிற்றுகிழமை இரவு 7 மணிக்கு தா்மா் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.