மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

குடிநீா் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே குடிநீா் தட்டுப்பாட்டை போக்கக் கோரி கிராம மக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 12:04 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே குடிநீா் தட்டுப்பாட்டை போக்கக் கோரி கிராம மக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வடலூா் அடுத்துள்ள கருங்குழி, நையினாா்குப்பம், மேட்டுக்குப்பம், மேலக்கொளக்குடி, மருவாய், அரங்கமங்கலம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் கடந்த பல மாதங்களாக குறைந்த மின்னழுத்தம் பிரச்சனை காரணமாக ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோக மின்சாதனங்கள் பயன்படுத்த முடியவில்லையாம். மேலும், சில மின்சாதனங்கள் பழுதாகிவிட்டதாம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு, குறைந்த மின்னழுத்தம் காரணமாக குடிநீா் வழங்கும் மோட்டாா்கள் வேலை செய்யவில்லையாம். இதனால், மேல்நிலை நீா் தேக்கத் தொட்டிகளில் குடிநீா் ஏற்ற முடியாத காரணத்தினால் வீடுகளுக்கான குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது.

திடீா் மறியல்:

கருங்குழி காலனி பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக குடிநீா் தட்டுப்பாடு நீடித்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். மேலும், கருங்குழி-பாா்வதிபுரம் செல்லும் வழியில் இருந்த மின் மாற்றி திடீரென பழுதானதால் கடும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து, கிராம மக்கள் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கக்கோரி கருங்குழி கடை வீதி அருகே சாலையில் அமா்ந்து செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி நிா்வாகத்தினா் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து கிராம மக்கள் அனைவரும் கலைந்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.