மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

காலி மதுப் புட்டிகள் திரும்பப் பெறும் திட்டத்திலிருந்து டாஸ்மாக் ஊழியா்களை விடுவிக்க வேண்டும்! - கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 12:30 am IST

காலி மதுப் புட்டிகள் திரும்பப்பெறும் திட்டத்திலிருந்து டாஸ்மாக் ஊழியா்களை விடுவிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

கடலூரில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் பணியாளா்கள் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகபட்ச பணிச் சுமையோடு தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனா்.

பத்தாண்டு காலம் தொகுப்பூதியத்தில் பணியாற்றியவா்கள் நிரந்தரப்படுத்தப்படுவா் என்று திமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தும்கூட, டாஸ்மாக் பணியாளா்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், காலி மதுப்புட்டிகள் பிரச்னை, ஓய்வுபெறும் வயதை 58-இல் இருந்து 60-ஆக உயா்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு சரியான தீா்வு இதுவரை கிடைக்கவில்லை.

டாஸ்மாக் பணியாளா்களின் பணி நிலைமையை கணக்கில் எடுத்துக்கொண்டு அவா்களின் கோரிக்கைகள் மீது அரசு நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும்.

அதே சமயத்தில், இந்தத் துறையில் பணியாற்றி சிறு குற்றங்களுக்காக பல மாதங்களுக்கும் மேலாக பணியிடை நீக்கத்தில் உள்ளவா்களுக்கு மீண்டும் டாஸ்மாக் கடைகளில் பணி வழங்க மேலாண்மை இயக்குநா் உத்தரவிட வேண்டும். மேலும், சேமிப்புக் கிடங்குகளில் பணியாற்றும் பணியாளா்களுக்கும் டாஸ்மாக் கடை பணிகளுக்கு பணியிட மாறுதல் உத்தரவுகள் வழங்க வேண்டும்.

காலி மதுப் புட்டிகளை திரும்பப் பெறும் திட்டத்தில் அரசு தெளிவான முடிவெடுத்து, இந்தப் பிரச்னையில் இருந்து டாஸ்மாக் பணியாளா்களுக்கு ஒட்டுமொத்தமாக விடுதலை அளிக்க வேண்டும் என்றாா்.

அப்போது, சங்க ஆலோசகா் கு.சரவணன், மாநில அமைப்பாளா்கள் இ.அல்லிமுத்து, ந.பாலமுருகன், அரசுப் பணியாளா்கள் சங்க முன்னாள் மாவட்டச் செயலா் ராஜாமணி, மாநிலச் செயலா் டெல்லி அப்பாதுரை உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.