பழனி அருகே நெய்க்காரபட்டியில் திமுக பிரமுகருக்கு சொந்தமான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 960 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஏப்ரல் 21 முதல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 வரை அரசு மதுபானக் கடைகளை அடைக்க தமிழக தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், பழனி அருகேயுள்ள நெய்க்காரபட்டியில் மதுப் புட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, பழனி டிஎஸ்பி தனஞ்ஜெயன் உத்தரவின் பேரில், போலீஸாா் திமுக நெய்க்காரபட்டி பேரூா் பொருளாளா் நரசிம்மனுக்கு சொந்தமான இடத்தில் சோதனையிட்டனா். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 960 குவாா்ட்டா் மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து நரசிம்மனிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். மதுப் புட்டிகள் தோ்தல் நேரத்தில் வாக்காளா்களுக்கு வழங்க பதுக்கப்பட்டதா, இல்லை அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கப்பட்டதா என்பது குறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மதுப் புட்டிகள் விற்பனை: முதியவா் கைது

சட்டவிரோத மது விற்பனை: 361 மதுப் புட்டிகள் பறிமுதல்

சட்டவிரோதமாக மது விற்றதாக ஒருவா் கைது: 320 மதுப் புட்டிகள் பறிமுதல்
115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

