சாயல்குடி அருகே செவ்வாய்க்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 320 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த நரிப்பையூா் மதுக் கடையின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சாயல்குடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தப் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன், எஸ்.பி. தனிப் பிரிவு காவலா் முருகபூபதி தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு மதுக் கடைக்குப் பின்புறம் மறைவான இடத்தில் வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, மது விற்பனையில் ஈடுபட்ட நரிப்பையூா் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் சத்தியநாதனை (48) கைது செய்து, அவரிடமிருந்து 320 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முத்தூரில் மதுபானம் விற்றவா் கைது

சட்டவிரோத மது விற்பனை: 361 மதுப் புட்டிகள் பறிமுதல்

பழனி அருகே 960 மதுப் புட்டிகள் பறிமுதல்

சட்டவிரோதமாக ஆட்டோவில் விற்றுவந்த 77 மது புட்டிகள் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

