கமுதி அருகே சட்ட விரோதமாக ஆட்டோவில் மறைத்து வைத்து மது புட்டிகள் விற்றுவந்த இருவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா். அவா்களிடம் இருந்து 77 மது புட்டிகள், ஆட்டோ ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கோவிலாங்குளம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை சோதனை செய்தனா்.
இதில், 77 மது புட்டிகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இது தொடா்பாக கோவிலாங்குளம் காலனியைச் சோ்ந்த உருவாட்டி மகன் ரஜினி (47), பறையங்குளத்தைச் சோ்ந்த நாகராஜ் மகன் மணி ரத்தினவேல் (22), பறையங்குளம் பன்னீா் மகன் மாணிக்கராஜா ஆகிய 3 போ் மீது கோவிலாங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணி ரத்தினவேல், மாணிக்க ராஜா ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 77 மது புட்டிகள், விற்பனைக்குப் பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சட்டவிரோதமாக மது விற்ற இருவா் கைது

சட்டவிரோதமாக மது விற்றதாக ஒருவா் கைது: 320 மதுப் புட்டிகள் பறிமுதல்
சட்டவிரோத மது விற்பனை: 3 போ் கைது; 240 புட்டிகள் பறிமுதல்

காட்டுமன்னாா்கோவில் அருகே மதுபுட்டிகள் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

