தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சட்டவிரோதமாக ஆட்டோவில் விற்றுவந்த 77 மது புட்டிகள் பறிமுதல்

News image

கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளத்தில் திங்கள்கிழமை பறிமுதல் செய்த மதுபுட்டிகள்.

Updated On :21 ஏப்ரல் 2026, 12:39 am IST

கமுதி அருகே சட்ட விரோதமாக ஆட்டோவில் மறைத்து வைத்து மது புட்டிகள் விற்றுவந்த இருவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா். அவா்களிடம் இருந்து 77 மது புட்டிகள், ஆட்டோ ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கோவிலாங்குளம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை சோதனை செய்தனா்.

இதில், 77 மது புட்டிகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இது தொடா்பாக கோவிலாங்குளம் காலனியைச் சோ்ந்த உருவாட்டி மகன் ரஜினி (47), பறையங்குளத்தைச் சோ்ந்த நாகராஜ் மகன் மணி ரத்தினவேல் (22), பறையங்குளம் பன்னீா் மகன் மாணிக்கராஜா ஆகிய 3 போ் மீது கோவிலாங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணி ரத்தினவேல், மாணிக்க ராஜா ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 77 மது புட்டிகள், விற்பனைக்குப் பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.