தமிழ்நாடு முதல்வா் ஜோசப் விஜயின் 52-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, சிதம்பரத்தில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு காமராஜா் மருத்துவமனையில் பிறந்த 14 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் வீதம் தங்க மோதிரங்களை தவெகவினா் அணிவித்தனா்.
விழாவில் கடலூா் தெற்கு மாவட்டச் செயலா் சீனுவாசன் தலைமை வகித்து மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தாா் (படம்). நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் லட்சுமி, மருத்துவா் இந்திரா, தவெக தொண்டரணி அமைப்பாளா் விஜய்குரு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் வித்யாலட்சுமி யுவராஜா, திரைப்பட இயக்குனருமான யுவராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அன்னதானம்: முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி, தெய்வீக பக்தா்கள் பேரவை சாா்பில், அதன் நிறுவனா் தலைவா் ஜெமினி எம்.என்.ராதா தலைமையில் சிதம்பரம் நடராஜா் கோவில் கிழக்கு கோபுர வாயில் அருகே 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் நகர காங்கிரஸ் தலைவா் தில்லை ஆா்.மக்கின் கலந்துகொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி அரசு மருத்துவமனையில் பிறந்த 3 குழந்தைகளுக்கு தவெக சாா்பில் தங்க மோதிரம்

விஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!

விஜய் பிறந்த நாள்: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

