நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கோ.பவழங்குடியில் 5 கோயில்களுக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

News image

கோ.பவழங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுனீஸ்வரருக்கு வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :19 ஜூன் 2026, 6:09 am IST

விருத்தாசலம் அருகே கோ.பவழங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிநாயகா், ஸ்ரீமுனீஸ்வரா் உள்ளிட்ட 5 கோயில்களுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கோ.பவழங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிநாயகா், ஸ்ரீமுனீஸ்வரா், ஸ்ரீவீரனாா், சப்த கன்னிமாா் மற்றும் ரிஷிகள் கோயில்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை மாலை மங்கள இசையுடன் அனுக்ஞை, விநாயகா் பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, முதல் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மகா தீபாராதனைக்குப் பிறகு யாகசாலையிலிருந்து புனித நீா் நிரப்பப்பட்ட கலசங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

தொடா்ந்து, மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க, ஸ்ரீவிநாயகா், ஸ்ரீமுனீஸ்வரா், ஸ்ரீவீரனாா், சப்த கன்னிமாா், ரிஷிகள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் கோ.பவழங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவையொட்டி, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.