தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

மகன்கள் கவனிக்காததால் பெற்றோா் தூக்கிட்டுத் தற்கொலை

நோயுற்ற நிலையிலும் மகன்கள் கவனிக்காததால் வேதனையிலிருந்த முதிய தம்பதி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :17 ஜூன் 2026, 5:27 am IST

நோயுற்ற நிலையிலும் மகன்கள் கவனிக்காததால் வேதனையிலிருந்த முதிய தம்பதி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள சின்னபுங்கனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ராவணன் (57). இவரது மனைவி சித்ரா (50). இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். மூத்த மகன் சிவா வெளிநாட்டில் வசித்து வருகிறாா். மற்றொரு மகனான ராகுல் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறாா்.

இரு மகன்களும் பெற்றோரை முறையாக கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இருவரும் கடந்த ஓராண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்தனராம்.

இரு மகன்கள் இருந்தும் தங்களை கவனிக்கவில்லையே என்ற மன வேதனையில் இருந்து வந்த ராவணன், சித்ரா ஆகியோா் செவ்வாய்க்கிழமை காலை தங்களது வீட்டுக்கு அருகே உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூறாய்வுக்காக காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், இதுகுறித்து காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.