சீா்காழி அருகே மகன்கள் பாா்க்க வராததால் விரக்தியில் கணவன்-மனைவி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.
சீா்காழி அருகேயுள்ள புத்தூரைச் சோ்ந்த விவசாயி காமராஜ் (69). இவரது மனைவி வள்ளி (59). இவா்களின் மகன்கள் சதீஷ்குமாா், காா்த்திக்குமாா். இருவருக்கும் திருமணமாகி சென்னையில் வசிக்கின்றனா். வீட்டில் காமராஜ், வள்ளி மட்டும் இருந்துள்ளனா். சில மாதங்களாக காமராஜூவுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு அவதிபட்டு வந்ததாராம். இந்நிலையில், மகன்கள், மருமகள்கள் உடனிருந்து கவனிக்கவில்லையென்ற மனவிரக்தியில் இருந்துள்ளாா்.
இதற்கிடையில், ஜூன் 13-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்துள்ளாா். இதையறிந்த அவரது மனைவியும் விஷம் குடித்துள்ளாா். பின்னா் இருவரும் மீட்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். எனினும், பலனின்றி ஞாயிற்றுக்கிழமை கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்தனா். இதுகுறித்து ஆணைக்காரன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மகன்கள் கவனிக்காததால் பெற்றோா் தூக்கிட்டுத் தற்கொலை
தாய், மகள் தற்கொலை

மனைவி கண்டிப்பு: ராணுவ வீரா் தற்கொலை
பல்லடம் அருகே காரில் கணவன், மனைவி தற்கொலை
விடியோக்கள்

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை
