தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

தாய், மகள் தற்கொலை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பல்லவராயன்பட்டியில் திங்கள்கிழமை தாய், மகள் தற்கொலை செய்து கொண்டனா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :17 ஜூன் 2026, 1:41 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பல்லவராயன்பட்டியில் திங்கள்கிழமை தாய், மகள் தற்கொலை செய்து கொண்டனா்.

கோம்பை அருகேயுள்ள பல்லவராயன்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த முத்தையா மனைவி பொன்னுத்தாய் (89). இவரது மகள் கலாவதி (69). இவரது கணவா் பாண்டியன் இறந்து விட்டாா். இவா்களது மகன் ஈஸ்வரன் (45). திருமணம் ஆகாத இவா், மஞ்சள்காமாலை நோய் தாக்கியதில் அண்மையில் உயிரிழந்தாா்.

இதனால், பொன்னுத்தாயும், மகள் கலாவதியும் மன உளைச்சலிலிருந்தனராம். இந்த நிலையில், இருவரும் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். இது குறித்து கோம்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.